தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகையான கல்பனா, கடந்த வருடம் ஜனவரி மாதம் திடீரென மரணம் அடைந்தார். கல்பனாவிற்கு ஒரே மகள் ஸ்ரீமயி. கல்பனாவிற்குப்பின் அவரது சித்தி ஊர்வசியும், பெரியம்மா கலாரஞ்சனியும் தான் அவருக்கு ஆதரவாக இருந்து வருகிறார்கள்.. இந்தநிலையில் தனது தாயைப்போலவே ஸ்ரீமயியும் சினிமாவில் நடிக்க வருகிறார் என ஒரு தகவல் அப்போதே கிளம்ப, அதை ஊர்வசி மறுத்து வந்தார்..
ஆனால் தற்போது ஸ்ரீமயி தனது பெயரை ஸ்ரீசங்க்யா என மாற்றிக்கொண்டு 'குஞ்சியம்மாவும் அஞ்சு பெண்களும்' என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இதுகுறித்து நேற்று நடைபெற்ற இந்தப்படத்தின் பிரஸ்மீட்டில் கலந்துகொண்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர் ஸ்ரீ சங்க்யாவும் அவரது பெரியம்மா கலாரஞ்சனியும். அறிமுக இயக்குனர் சுமேஷ் லால் இயக்கும் இந்த படத்தில் நடிகர்கள் கலாபவன் சாஜனும் டினி டாமும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.