மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தமிழ் சினிமாவையே அமோகமாகக் கிண்டலடித்து எடுக்கப்பட்ட படமான 'தமிழ்ப் படம்' 2010ம் ஆண்டு வெளிவந்தது. சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கண்ணன் இசையமைப்பில் சிவா, திஷா பான்டே மற்றும் பலர் நடித்து வெளிவந்த அந்தப் படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியையும் பெற்றது.
7 வருடங்களுக்குப் பிறகு அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ஆரம்பமாக உள்ளது. இரண்டாம் பாகத்திற்கு 'தமிழ்ப் படம் 2.0' எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தை முதல் பாகத்தை இயக்கிய சி.எஸ்.அமுதன் இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த சிவா, இரண்டாம் பாகத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் முதல் போஸ்டரை நடிகர் சித்தார்த் இன்று காலை வெளியிட்டார்.
அந்த போஸ்டரில் '25.05.2018 தியேட்டர்களில் படம் வெளியாகிறது, 26.05.2018 அன்று தமிழ் ராக்கர்ஸில் படம் வெளியாகிறது,” என்ற வாசகங்களுடன் பட போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். படங்களைக் கிண்டல் செய்வது பரவாயில்லை. ஆனால், தமிழ்த் திரையுலகத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் பைரசி பிரச்சனையான தமிழ் ராக்கர்ஸ் இணையதளப் பிரச்சனையையும் சேர்த்து கிண்டலடித்திருப்பது ஓவராகவே இருக்கிறது.
தயாரிப்பாளர் சங்கமும், மற்ற தயாரிப்பாளர்களும் தமிழ் ராக்கர்ஸ் பிரச்சனையை அழிக்க முயற்சி எடுத்து வரும் நிலையில், அவர்களையும் சேர்த்தே இந்த போஸ்டர் கிண்டலடித்துள்ளது. அதிலும் 'அதிகாரப்பூர்வ பைரசி பார்ட்னர்' என்று அந்த இணையதளத்தின் லோகோவையும் போஸ்டரில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
400 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்படும் '2.0' படத்தைக் கிண்டலடித்து, 4 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படும் படத்திற்கு 'தமிழ்ப் படம் 2.0' என ஒரு தலைப்பு, திரையுலகமே சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் பைரசி இணையதளத்திற்கு ஒரு இலவச விளம்பரம்?. தமிழ் சினிமாவை நன்றாகவே வளர்க்கிறார்கள் 'தமிழ்ப் படம் 2.0' குழுவினர்....!!!.