மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஆர்கே.நகரில் யாரையும் நான் ஆதரிக்கவில்லை, எனது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வை விரைவில் அறிவிப்பேன் என விஷால் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திடீரென களமிறங்கி, வேட்பு மனு தாக்கல் செய்தார் விஷால். அவரின் வேட்புமனு பல்வேறு சர்ச்சைகளுடன் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து போராடி வருகிறார். இந்நிலையில் அவர் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது...
ஜனநாயகம் சிதைப்பு
ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் நான் போட்டியிட மனு தாக்கல் செய்தது எனது சுயசிந்தனையின் உந்துதலால் எடுத்த முடிவு. அந்த தொகுதி மக்களுக்கு பணியாற்றவே இந்த முடிவை எடுத்தேன். ஆனால் பவர் பாலிடிக்ஸ் எனும் ஆதிக்க அரசியல் சக்திகளால் ஜனநாயகம் சிதைக்கப்பட்டு என் மனு நிராகரிக்கப்பட்டது.
யாரையும் ஆதரிக்கவில்லை
எனக்கு நேர்ந்த அநீதிக்கு மக்கள் மன்றமே சாட்சி. என்னுடைய மக்கள் பணிகளும், ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் போராட்டமும் எப்போதும் தொடரும். நான் சிலரை ஆதரிப்பதாக செய்தி பரப்பப்படுகிறது. நான் யாரையும் இதுவரை சொல்லவில்லை, அப்படி ஒரு முடிவை எடுக்கவில்லை.
விரைவில் அரசியல் அறிவிப்பு
என்னுடைய போராட்டத்தில் துணை நின்ற ரசிகர்கள், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள், குரல் கொடுத்த தலைவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். என்னுடைய அடுத்தக்கட்ட அரசியல் நகர்வை விரைவில் அறிவிப்பேன்.
மீனவர்கள் பிரச்னையை தீருங்கள்
இந்த நேரத்தில் ஆளும்கட்சிக்கு ஓர் கோரிக்கை... ஆர்கேநகர் தேர்தல் உங்களுக்கு முக்கியம் தான். ஆனால் அதைவிட கன்னியாகுமரியில் நடக்கும் மீனவர்கள் போராட்டமும், அவர்களின் வாழ்வாதாரமும் முக்கியம். நியாயமான கோரிக்கைகளுடன் போராடி வரும் மீனவர்களை உடனே சந்தித்து அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள். ஆர்.கே.நகர் மக்களும் இதை தான் எதிர்பார்க்கிறார்கள். இது உங்களுக்கு நல்ல பெயரை கொடுக்கும். மீனவர்கள் சார்பாகவும், ஆர்கேநகர் தொகுதி மக்கள் சார்பாகவும் இந்த கோரிக்கையை வைக்கிறேன்.
இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.