இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
திட்டமிட்டபடி குறுகிய காலத்தில் படத்தை எடுத்து முடிப்பது எப்படி என்பதை இரண்டு இயக்குநர்களிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். ஒருவர்.. ஹரி. இன்னொருவர் சுந்தர்.சி.
நட்சத்திரக் கூட்டத்தையே வைத்து படம் இயக்கும் இவர்கள் இருவரும் சொன்ன தேதிக்கு முன்பாகவே படப்பிடிப்பை முடித்துவிடுகிறார்கள். சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், 'மிர்ச்சி' சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரெசா நடிக்கும் 'கலகலப்பு-2' படமும் இதற்கு விதிவிலக்கு இல்லை.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்ற அக்டோபர் 4 ஆம் தேதி காரைக்குடியில் துவங்கியது. தொடர்ந்து காசி, ராஜஸ்தான், ஐதராபாத் என பல மாநிலங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
சுமார் 60 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த படப்பிடிப்பு இம்மாதம் 4-ஆம் தேதியுடன் முடிவுற்றது. சரியாக இரண்டு மாத காலத்தில் அனைத்து படப்பிடிப்பு வேலைகளையும் முடித்துவிட்ட சுந்தர்.சி ஓய்வே எடுக்காமல் படத்தின் டப்பிங் பணிகளையும் துவங்கி விட்டார்.
குஷ்புவின் ஆவ்னி மீடியா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு 'ஹிப் பாப் தமிழா' ஆதி இசை அமைக்கிறார். 'கலகலப்பு-2' படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் சுந்தர்.சி.