மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல், அவர்களை நஷ்டப்படுத்தும் நடிகர்களில் சிம்புவுக்கு முதலிடம் என்றால் இரண்டாவது இடம் ஜெய்க்குத்தான்.
ஜெய் நடித்து வருடக்கணக்கில் தயாரிப்பில் இருக்கும் 'பலூன்' படம் இம்மாதம் 29-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து பார்ட்டி படத்திலும், சுந்தர் சி.இயக்கத்தில் 'கலகலப்பு-2' படத்தில் நடித்து முடித்துள்ள ஜெய், அடுத்து 'எத்தன்' படத்தை இயக்கிய சுரேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் ஜெய்யுடன் மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.
ஒரு கதாநாயகியாக ராய் லட்சுமி ஒப்பந்தமாகியிருக்கிறார். இன்னொரு கதாநாயகியாக வரலட்சுமி சரத்குமாரும் மற்றொரு கதாநாயகியாக கேத்ரின் தெரெசாவும் நடிக்க இருக்கிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னையில் துவங்குகிறது.