ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல், அவர்களை நஷ்டப்படுத்தும் நடிகர்களில் சிம்புவுக்கு முதலிடம் என்றால் இரண்டாவது இடம் ஜெய்க்குத்தான்.
ஜெய் நடித்து வருடக்கணக்கில் தயாரிப்பில் இருக்கும் 'பலூன்' படம் இம்மாதம் 29-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து பார்ட்டி படத்திலும், சுந்தர் சி.இயக்கத்தில் 'கலகலப்பு-2' படத்தில் நடித்து முடித்துள்ள ஜெய், அடுத்து 'எத்தன்' படத்தை இயக்கிய சுரேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் ஜெய்யுடன் மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.
ஒரு கதாநாயகியாக ராய் லட்சுமி ஒப்பந்தமாகியிருக்கிறார். இன்னொரு கதாநாயகியாக வரலட்சுமி சரத்குமாரும் மற்றொரு கதாநாயகியாக கேத்ரின் தெரெசாவும் நடிக்க இருக்கிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னையில் துவங்குகிறது.