ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இடைத் தேர்தலை விடவும் தமிழ்நாட்டின் சினிமா நிலவரம் தான் பல புதுப்புதுத் திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்தத் திருப்பங்களில் ஒன்றாக சிம்பு இசையமைத்த 'சக்கப் போடு போடு ராஜா' இசை வெளியீட்டில் தனுஷ் கலந்து கொண்டதும், புதிய திருப்பங்களில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
சிம்புவும், தனுஷும் அவ்வளவு நெருக்கமானவர்கள் இல்லை என்பது திரையுலகத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இருந்தாலும் அந்த இசை வெளியீட்டு மேடையில் அவர்களது நெருக்கத்தையும், பாசத்தையும் பார்த்தவர்களுக்கு விக்ரமன் படப்பாடல் பின்னணியில் ஒலித்திருக்கும்.
சிம்பு மீது தனுஷுக்கு ஏன் இந்த திடீர்ப் பாசம், அல்லது தனுஷ் மீது சிம்புவுக்கு ஏன் இந்த திடீர்ப் பாசம் எனப் பலரும் தலையை பிய்த்துக் கொண்டிருப்பார்கள். விஜய், அஜித்திற்குப் பிறகு சிம்பு, தனுஷ் என ஒரு நிலை உருவாகலாம் என சில வருடங்களுக்கு முன்பு பேசப்பட்டது.
ஆனால், சிம்புவால் தொடர்ந்து வெற்றியைக் கொடுக்க முடியவில்லை. அவரைப் பற்றியும் பல சர்ச்சைகள். அந்த சர்ச்சைகளின் பெரும் சர்ச்சையாக 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத் தயாரிப்பாளர் புகாரும், தொடர்ந்து சிம்பு மீது நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கும் தயாரிப்பாளர் சங்கத்தின் நிலைமையும் இருக்கிறது.
விஷாலுக்கு எதிரானவர் என்ற நிலையை சிம்பு நடிகர் சங்கத் தேர்தலிலேயே கடைபிடித்து வருகிறார். ஆனால், தனுஷ் அந்த விஷயத்தில் தான் எந்தப் பக்கம் என்பதை இதுவரை வெளிப்படுத்தாமலே இருக்கிறார்.
சிம்புவும், தனுஷும் அடுத்து திரையுலகில் தங்களின் சகாப்தம் தான் அடுத்தது என்பதை மற்றவர்களுக்கும் புரிய வைக்கவே சில நலம் விரும்பிகளால் மீண்டும் சேர்த்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்கிறார்கள்.
'சக்கப் போடு போடு ராஜா' நிகழ்ச்சி மேடையில் நடந்த சிம்பு, தனுஷ் பாசம் அவர்களது ரசிகர்களைப் பொறுத்தவரையில் ஒரு கொண்டாட்டத்தைக் கொடுத்திருக்கும். அது யாருக்கு சக்கையாக அமையப் போகிறது, யாரை ராஜாவாக்கப் போகிறது என்பது போகப் போகத்தான் தெரியும்.