இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
இயக்குனர் கவுதம் மேனன், நேற்று தனது சொகுசு காரில் மாமல்லபுரத்திலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தபோது கார் நிலை தடுமாறி டிப்பர் லாரி மீது மோதியது. இதில் கவுதம் மேனன் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். கார் கடும் சேதம் அடைந்தது.
காயம் அடைந்த அவரை அந்த வழியாக வந்த ஐ.டி நிறுவன அதிகாரி கோபாலகிருஷ்ணன் என்பவர் தன் காரில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளார். சிகிச்சைக்கு பிறகு கவுதம் மேனன் வீடு திரும்பினார்.
இதுகுறித்து கவுதம் மேனன் தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியிருப்பதாவது: என் நலன் விரும்பிய, நலம்பெற வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி. வாழ்வைத் திருப்பிய நொடிகள் அவை. இப்போது நலமாக இருக்கிறேன். எச்.சி.எல் நிறுவனத்தில் பணிபுரியும் கோபாலகிருஷ்ணன் செய்த உதவியால் மனிதாபிமானத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்டேன். மீண்டும் படப்பிடிப்பு தொடங்க காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.