தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா நடிப்பில் நீயா என்ற படம் பாம்பை அடிப்படையாக கொண்டு வெளிவந்தது. தற்போது அதேப்போன்று பாம்பை அடிப்படையாக கொண்டு பேண்டசி த்ரில்லர் படம் ஒன்றை இயக்குகிறார் சுரேஷ். விமல் இயக்கிய எத்தன் படத்தை இயக்கியவர். இதில் ஜெய் ஹீரோவாக நடிக்க, அவருடன் கேத்ரின் தெரசா, வரலட்சுமி, ராய் லட்சுமி என மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்புகள் அடுத்த மாதம் தொடங்குகிறது.
"இது முழுக்க முழுக்க புதுமையான என்டர்டெயின்மென்ட் படம். கமல் நடித்த நீயா படத்தின் கதைக்கும், இந்தப் படத்தின் கதைக்கும் சம்பந்தமில்லை. படத்தின் கதை பற்றி இப்போது எதுவும் கூற முடியாது. 3 மெயின் ஹீரோயின்கள் இருந்தாலும் மேலும் சில நடிகைகள் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்" என்கிறார் இயக்குனர் சுரேஷ்.