இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா நடிப்பில் நீயா என்ற படம் பாம்பை அடிப்படையாக கொண்டு வெளிவந்தது. தற்போது அதேப்போன்று பாம்பை அடிப்படையாக கொண்டு பேண்டசி த்ரில்லர் படம் ஒன்றை இயக்குகிறார் சுரேஷ். விமல் இயக்கிய எத்தன் படத்தை இயக்கியவர். இதில் ஜெய் ஹீரோவாக நடிக்க, அவருடன் கேத்ரின் தெரசா, வரலட்சுமி, ராய் லட்சுமி என மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்புகள் அடுத்த மாதம் தொடங்குகிறது.
"இது முழுக்க முழுக்க புதுமையான என்டர்டெயின்மென்ட் படம். கமல் நடித்த நீயா படத்தின் கதைக்கும், இந்தப் படத்தின் கதைக்கும் சம்பந்தமில்லை. படத்தின் கதை பற்றி இப்போது எதுவும் கூற முடியாது. 3 மெயின் ஹீரோயின்கள் இருந்தாலும் மேலும் சில நடிகைகள் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்" என்கிறார் இயக்குனர் சுரேஷ்.