கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா நடிப்பில் நீயா என்ற படம் பாம்பை அடிப்படையாக கொண்டு வெளிவந்தது. தற்போது அதேப்போன்று பாம்பை அடிப்படையாக கொண்டு பேண்டசி த்ரில்லர் படம் ஒன்றை இயக்குகிறார் சுரேஷ். விமல் இயக்கிய எத்தன் படத்தை இயக்கியவர். இதில் ஜெய் ஹீரோவாக நடிக்க, அவருடன் கேத்ரின் தெரசா, வரலட்சுமி, ராய் லட்சுமி என மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்புகள் அடுத்த மாதம் தொடங்குகிறது.
"இது முழுக்க முழுக்க புதுமையான என்டர்டெயின்மென்ட் படம். கமல் நடித்த நீயா படத்தின் கதைக்கும், இந்தப் படத்தின் கதைக்கும் சம்பந்தமில்லை. படத்தின் கதை பற்றி இப்போது எதுவும் கூற முடியாது. 3 மெயின் ஹீரோயின்கள் இருந்தாலும் மேலும் சில நடிகைகள் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்" என்கிறார் இயக்குனர் சுரேஷ்.