'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'என்ன தான் வெற்றிப் படங்களில் நடித்தாலும், முன்னணி வரிசைக்கு நம்மால் வர முடியவில்லையே' என, புலம்புகிறார், ரம்யா நம்பீசன். இவர் நடித்த குள்ளநரிக் கூட்டம், சேதுபதி போன்ற படங்கள் வெற்றி பெற்றதுடன், இவரதுநடிப்புக்கு பாராட்டையும் பெற்றுத் தந்தவை. ஆனாலும், முதல் வரிசை ஹீரோயினாக இவரால் உருவெடுக்க முடியாமல், நிரந்தரமான இடத்தை பிடிப்பதற்காக தொடர்ந்து போராடுகிறார். 'குடும்ப பாங்கான தோற்றம், சொந்த குரலில் பாடும் திறமை ஆகியவை இருந்தும், ரம்யாவுக்கென தமிழில் ஒரு தனி இடம் இல்லாதது, வருத்தமான விஷயம் தான்' என்கின்றனர், இவரது ரசிகர்கள். ரம்யாவோ, 'சிபிராஜுடன், சத்யா என்ற படத்தில்
நடித்துள்ளேன். நல்ல கதையம்சம் உள்ள படம்; நிச்சயம் எனக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும்' என, நம்பிக்கையுடன் கூறுகிறார்.