வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி |
பாகுபலி-2 படத்தை அடுத்து ஒரு மல்டி ஹீரோ கதையை படமாக்குகிறார் ராஜமவுலி. இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. பாலிவுட் வியாபாரத்தை கருத்தில் கொண்டு ஹிந்தி நடிகர்களையும் இந்த படத்தில் நடிக்க வைக்க எண்ணியுள்ளார்.
தனது புதிய படம் குறித்து ராஜமவுலி அளித்துள்ள ஒரு பேட்டியில், இப்போதெல்லாம் ரசிகர்கள் தாங்கள் படம் பார்க்க டிக்கெட்டிற்கு கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு மரியாதை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதாவது ஸ்டார் வேல்யூ கொண்ட நடிகர்கள் - டைரக்டர்கள் என்பதை விட நல்ல படங்களை எதிர்பார்க்கிறார்கள்.
பாகுபலி-2விற்கு பிறகு எனது படங்களுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதனால், அடுத்தபடியாக அழுத்தமான ஒரு கதையில், ரசிகர்கள் டிக்கெட்டிற்காக கொடுக்கும் பணத்தின் வேல்யூவை புரிந்து படத்தை இயக்கப்போகிறேன் என்று கூறியுள்ளார் ராஜமவுலி.