டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாகுபலி-2 படத்தை அடுத்து ஒரு மல்டி ஹீரோ கதையை படமாக்குகிறார் ராஜமவுலி. இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. பாலிவுட் வியாபாரத்தை கருத்தில் கொண்டு ஹிந்தி நடிகர்களையும் இந்த படத்தில் நடிக்க வைக்க எண்ணியுள்ளார்.
தனது புதிய படம் குறித்து ராஜமவுலி அளித்துள்ள ஒரு பேட்டியில், இப்போதெல்லாம் ரசிகர்கள் தாங்கள் படம் பார்க்க டிக்கெட்டிற்கு கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு மரியாதை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதாவது ஸ்டார் வேல்யூ கொண்ட நடிகர்கள் - டைரக்டர்கள் என்பதை விட நல்ல படங்களை எதிர்பார்க்கிறார்கள்.
பாகுபலி-2விற்கு பிறகு எனது படங்களுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதனால், அடுத்தபடியாக அழுத்தமான ஒரு கதையில், ரசிகர்கள் டிக்கெட்டிற்காக கொடுக்கும் பணத்தின் வேல்யூவை புரிந்து படத்தை இயக்கப்போகிறேன் என்று கூறியுள்ளார் ராஜமவுலி.