தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாளத்தில் நிவின்பாலி நடிப்பில் உருவாகி வரும் 'காயங்குளம் கொச்சுன்னி' படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட அமலாபால் அதிலிருந்து விலகிவிட, அவருக்கு பதிலாக அந்த வாய்ப்பு நடிகை பிரியா ஆனந்த்திற்கு கைமாறியுள்ள செய்தி தெரிந்தது தான். அமலாபால் இப்படி டிமிக்கி கொடுப்பது வாடிக்கைதான் என சிலர் சோஷியல் மீடியாவில் அவரை விமர்சித்து வருகிறார்கள்.
ஆனால், படத்தின் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸோ, “சமீபத்தில் கேரளாவில் பெய்த மழை காரணமாக படப்பிடிப்பில் தேக்கம் ஏற்பட்டது. அதனால் அடுத்ததாக நாங்கள் கேட்ட தேதிகளில் அமலாபால் வேறு படங்களில் ஒப்பந்தம் ஆகியிருந்தார். அதனால் தான் அவரால் நடிக்க இயலவில்லை. மற்றபடி அவருக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை” என விளக்கம் கூறியிருக்கிறார்.
தமிழில் அடுத்தடுத்து மூன்று படங்கள் இருப்பதால் தான் தன்னால் 'காயங்குளம் கொச்சுன்னி'யில் நடிக்க முடியாமல் போனது என அமலாபாலும் விளக்கம் அளித்துள்ளார். அதேசமயம் இந்தப்படத்தில் கதாநாயகியாக இணைந்துள்ள பிரியா ஆனந்த் சொல்லியிருக்கும் ஸ்டேட்மெண்ட் தான் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது..
ஆம், வரலாற்றுப் படத்தில் நடிக்க வேண்டும் என்பது பிரியா ஆனந்தின் ஆசையாம். அதனால் இந்தப்பட வாய்ப்பு வந்ததும் தான் ஏற்கனவே ஒப்பந்தம் ஆகியிருந்த மூன்று படங்களை தூக்கிப்போட்டு விட்டு இதில் நடிக்க வந்துவிட்டாராம்.
உண்மையான தவறு யார் மேல் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை.