ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
ஆர்கே.நகர் தேர்தல் அலுவலர் வேலுச்சாமியை நடிகர் விஷால் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், நான் தேர்தல் அலுவலரை மிரட்டினேனாம். அதனால் தான் அவர் ஒப்புக் கொண்டதாக சொல்கிறார். ஒரு தேர்தல் அதிகாரியை நான் எப்படி மிரட்ட முடியும்.
நான் மிரட்டினேனா இல்லையா என்பது அங்கிருக்கும் கேமராவில் பதிவாகி இருக்கிறது. ஏற்கனவே அங்கு என்ன நடந்தது என்ற வீடியோக்கள் எல்லாம் வெளியாகி உள்ளது. அடுத்ததாக இந்திய தேர்தல் ஆணையத்தை சந்திக்க உள்ளேன். என்னை முன்மொழிந்தவர்கள் வீட்டிற்கு வெளியே யார் யாரோ பாதுகாப்பிற்கு நிற்கிறார்கள். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. இதை நான் விடுவதாக இல்லை. இந்திய தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்.
நான் தேர்தலில் நிற்கவில்லை என்பது முடிவாகிவிட்டது. இப்போது சொல்கிறேன், தேர்தலில் நிற்காமல், அந்த தொகுதி மக்களுக்கு என்னென்ன நல்லது செய்ய வேண்டுமோ அதை நான் செய்வேன் என்று ஆவேசமாய் பேசி அந்த இடத்தை விட்டு கிளம்பினார்.