பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சென்னை : என்னை முன்மொழிந்தவர்களை காணவில்லை, அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை என விஷால் தெரிவித்துள்ளார்.
ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் களமிறங்கி, வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது வேட்பு மனு பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே நிராகரிக்கப்பட்டது. மாலை 3 மணிக்குள், தேர்தல் அலுவலரை சந்தித்து, விஷாலை முன்மொழிந்ததாக சொல்லப்பட்டு, பின்னர் அவர்கள் முன்மொழியவில்லை என்று கூறப்பட்ட அந்த இரண்டு நபர்களும் நேரில் விளக்கம் அளித்தால் அவரது மனு மறுபரிசீலனை செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்நிலையில், சென்னை தேர்தல் ஆணையம் அலுவலகம் வந்த விஷால் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது... என்னை முன்மொழிந்த சுமதி, தீபன் இருவரும் எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை, அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இப்போது என் மனு ஏற்பதை விட அவர்களின் பாதுகாப்பு தான் ரொம்ப முக்கியம். இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்க உள்ளேன் என்றார்.
சினிமாவை மிஞ்சும் அளவுக்கு ஆர்.கே.நகரில் விஷால், பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது. இதன்மூலம் விஷால், அந்த இரண்டு பேரையும் 3மணிக்குள் ஆஜர்படுத்துவது என்பது கடினம். ஆகையால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது நிரகாரிக்கப்பட்டது தான். அவர் போட்டியிடுவதற்காக இருந்த ஒரு வாய்ப்பும் கைநழுவி போய் கொண்டு இருக்கிறது.