மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? |
நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி சமீபத்தில் ஷேவ் சக்தி என்ற பெண்கள் அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பின் சார்பில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்த்து போராடப் போவதாக அறிவித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு கையெழுத்து இயக்கம் நடத்தினார். அதன் பிறகு மத்திய சட்ட அமைச்சரை டில்லியில் சந்தித்த வரலட்சுமி, நாடு முழுவதும், மாவட்டம் தோறும் மகிளா கோர்ட் (பெண்களுக்கென்று தனி நீதிமன்றம்) அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் வரலட்சுமி, நேற்று முதல்வர் எடப்படி பழனிச்சாமியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பின்னர் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா. ஆகியோரை சந்தித்து மகிளா கோர்ட் அமைப்பது தொடர்பாக பேசினார் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
பெண்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். எனவே பெண்கள் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு 6 மாதத்தில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் தவறு செய்பவர்களுக்கு பயம் வரும். பெண்களுக்கான நீதிமன்றங்களை அதிக அளவில் அமைக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு வசதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்கள் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று முதல் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார். என்றார் வரலட்சுமி.