டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி சமீபத்தில் ஷேவ் சக்தி என்ற பெண்கள் அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பின் சார்பில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்த்து போராடப் போவதாக அறிவித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு கையெழுத்து இயக்கம் நடத்தினார். அதன் பிறகு மத்திய சட்ட அமைச்சரை டில்லியில் சந்தித்த வரலட்சுமி, நாடு முழுவதும், மாவட்டம் தோறும் மகிளா கோர்ட் (பெண்களுக்கென்று தனி நீதிமன்றம்) அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் வரலட்சுமி, நேற்று முதல்வர் எடப்படி பழனிச்சாமியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பின்னர் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா. ஆகியோரை சந்தித்து மகிளா கோர்ட் அமைப்பது தொடர்பாக பேசினார் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
பெண்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். எனவே பெண்கள் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு 6 மாதத்தில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் தவறு செய்பவர்களுக்கு பயம் வரும். பெண்களுக்கான நீதிமன்றங்களை அதிக அளவில் அமைக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு வசதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்கள் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று முதல் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார். என்றார் வரலட்சுமி.