'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
என் நாட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் களமிறங்கி வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது வேட்பு மனு பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று பேட்டியளித்து வருகிறார். இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியையும் சந்தித்து முறையிட்டார். இந்திய தலைமை தேர்தல் ஆணையம், பிரதமர், ஜனாதிபதி ஆகியோரையும் முறையிடப்போவதாக தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், ஆர்கே.நகர் தேர்தலையொட்டி மீண்டும் டுவிட்டருக்கு வந்துள்ள விஷால், "ஜனநாயகம் மீண்டும் தலைதூக்கும் என காத்திருக்கிறேன். செயலற்ற அரசுகளிடமிருந்து, நான் விரும்பும் என் நாட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்" என்று கூறியுள்ளார்.