தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். அடுத்த ஆண்டு ஆந்திராவில் சட்டமன்ற தேர்தல் வருவதைத் தொடர்ந்து தனது கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் இறங்கியுள்ளார். நேற்று சாலோ ரே சாலோ ரே சால் -என்ற பெயரில் தனது பிரச்சார யாத்திரையை அவர் தொடங்கினார்.
அப்போது ஆந்திராவில் தற்கொலை செய்து கொண்ட வெங்கடேஷ் என்ற இளைஞரின் பெற்றோரை அழைத்து பேசினர் பவன் கல்யாண். அதோடு அந்த பகுதி எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிரான கருத்துக்களை முன் வைத்தார்.
மக்கள் விரோத செயல்களை ஜனசேனா பார்ட்டி பொறுத்துக் கொள்ளாது. மக்களை சூழ்ந்து கொண்டுள்ள பிரச்னைகளை விடுவிடுக்க, நல்லது செய்ய, சேவை செய்ய அரசியலில் இறங்கியிருக்கிறேன். மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே சினிமாவில் நடித்து வருகிறேன். விபத்துக்கள், குற்றங்கள், காட்டுமிராண்டி தனங்களை கடுமையாக எதிர்க்கிறேன் என்று பேசினார்.
பவன்கல்யாணின் இந்த பேச்சு பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றிருக்கிறது. பவன் கல்யாணின் இந்த அரசியல் யாத்திரை பயணம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது.