அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
எஸ்-3 படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. கார்த்தி, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அவர் இசையில் உருவான சொடக்கு மேல சொடக்கு போடுது பாடல் சூப்பர் ஹிட்டாகி படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும், இந்த தானா சேர்ந்த கூட்டம் படம் தெலுங்கில் கேங் என்ற பெயரில் வெளியாகிறது. இந்த படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது அவர் சில புதுவரவு இயக்குனர்களிடமும் கதை கேட்டு வருகிறார். அதில் சந்தீப்கிஷன் நடித்த மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் சொன்ன கதை சூர்யாவை இம்ப்ரஸ் பண்ணியுள்ளதாம். அதையடுத்து அவரது இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.