டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
எஸ்-3 படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. கார்த்தி, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அவர் இசையில் உருவான சொடக்கு மேல சொடக்கு போடுது பாடல் சூப்பர் ஹிட்டாகி படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும், இந்த தானா சேர்ந்த கூட்டம் படம் தெலுங்கில் கேங் என்ற பெயரில் வெளியாகிறது. இந்த படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது அவர் சில புதுவரவு இயக்குனர்களிடமும் கதை கேட்டு வருகிறார். அதில் சந்தீப்கிஷன் நடித்த மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் சொன்ன கதை சூர்யாவை இம்ப்ரஸ் பண்ணியுள்ளதாம். அதையடுத்து அவரது இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.