ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்தியத் திரையுலகத்திதைப் பற்றி உலகத் திரையுலகமே வியக்கும் அளவிற்கு இந்த ஆண்டில் வெளிவந்து வசூல் சாதனை புரிந்த படம் பாகுபலி 2. ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபட்டி மற்றும் பலர் நடித்து, ஏப்ரல் 28ம் தேதி வெளிவந்த படம் 1700 கோடி ரூபாய் அளவிற்கு வசூலித்து, அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது.
பாகுபலி 2 படத்திற்குப் பிறகு அதை விட அதிகப் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் படம் 2.0. ஒரே சமயத்தில் தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்தப் படம் தயாராகி வருகிறது. பாகுபலி 2 படத்தை தெலுங்கில் மட்டும் எடுத்துவிட்டு மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டார்கள். தமிழில் மட்டும் சில குறிப்பிட்ட காட்சிகளை மட்டும் நேரடியாகப் படமாக்கினார்கள். அந்தப் படம் பற்றிய எந்தவிதமான பெருமையான பேச்சும் தெலுங்குத் திரையுலகத்தையே சாரும்.
ஆனால், 2.0 படத்தில் அக்ஷய்குமார் மற்றொரு கதாநாயகனாக நடிப்பதால் படத்தை ஹிந்தியிலும் நேரடியாகப் படமாக்கியிருக்கிறார்கள். அதன் மூலம் பாகுபலி 2 போன்று டப்பிங் படத்தைப் பார்த்த உணர்வு ஹிந்தி ரசிகர்களுக்கு இருக்காது. இருந்தாலும் பட வெளியீட்டைப் பொறுத்தவரையில் பாகுபலி 2 படத்தின் பாலிசியை 2.0 பின்பற்றுவதாக தெலுங்குத் திரையுலகில் பேசிக் கொள்கிறார்கள்.
பாகுபலி 2 படம் 2016ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி வெளியானது. 2.0 படம் 2018ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகுபலி 2 படத்தில் நல்ல குணம் கொண்ட ஒருவனுக்கும் தீய குணம் கொண்ட ஒருவனுக்கும் இடையே நடக்கும் போராட்டம்தான் கதை. அதே போல 2.0 படத்தில் நல்ல குணம் கொண்ட ரோபோ (?)வுக்கும் தீய குணம் கொண்ட ரோபோ (?)வுக்கும் நடக்கும் சண்டைதான் கதையாக இருக்க வேண்டும்.
எது எப்படியோ 2018ம் ஆண்டு கோடை விடுமுறையில், தென்னிந்திய ரசிகர்களைக் கவர ரஜினிகாந்தும், வட இந்திய ரசிகர்களைக் கவர அக்ஷய்குமாருக்கும் இடையே நடக்கும் போட்டியில் பாகுபலி 2 படத்தை விட வசூல் போட்டி இருந்தால், அது தமிழ்த் திரையுலகத்திற்குப் பெருமை சேர்க்கும் விஷயமாக அமையும்.