பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஜாதி ரீதியாக போட்டியிடவில்லை, இந்தியனாகத்தான் போட்டியிட்டேன், என் பின்னால் யாருமில்லை என்று கூறியுள்ளார் விஷால்.
நடிகர் விஷால், ஆர்கே.நகர் தேர்தலில் போட்டியிட்டார். அவரது மனு நேற்று பரிசீலனைக்கு வந்தபோது முதலில் நிராகரிக்கப்பட்டு, பின்னர் ஏற்றக் கொள்ளப்பட்டு பின்னர் மீண்டும் நிராகரிக்கப்பட்டது. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சட்டவல்லுநர்கள் உடன் ஆலோசனை நடத்திய விஷால், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது...
ஆதாரம்
சுயேட்சையாக போட்டியிட முயற்சித்த என்னை அச்சுறுத்தலாக கருதுவது ஏன்? ஜனநாயக ரீதியில் பெரிய தவறு நடந்துள்ளது. விஷால் வேட்புமனு ஏற்கப்பட்டது என அறிவிக்கப்பட்டதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. 3 மணி நேரத்திற்கு பின் நிராகரிப்பு என அறிவிப்பு வெளியானது. இது ஜனநாயகத்திற்கு எதிரானது. எனது வேட்புமனு திட்டமிட்டே நிராகரிக்கப்பட்டது. இதை தேர்தல் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்வேன்.
இந்தியனாக...
மக்களுக்கு நல்லது செய்ய இவ்வளவு பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. ஆர்கே நகர் தேர்தலில் இந்தியனாக தான் நின்றேன். தெலுங்கு பேசும் மக்களின் ஓட்டுகளை பிரிக்க ஜாதி ரீதியாக நிற்கவில்லை. தினகரன், கமல், திமுக எனக்கு ஆதரவு என சொல்கின்றனர். ஆனால், எனக்கு எந்த பின்னணியும் இல்லை. மக்களுக்கு நல்லது செய்யவே களத்தில் இறங்கினேன். எனக்கு நடந்த அநியாயத்தை பதிவு செய்ய முயற்சி செய்தேன்.
மிரட்டல்
வேட்புமனுவை முன்மொழிந்தவர்கள் மிரட்டபட்டதால் நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர். எதிர்காலத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கருதுகிறேன். எனக்கு என்ன நேர்ந்தது என்பதை மக்கள் பார்த்து கொண்டுள்ளனர். நான் அரசியல் கட்சி துவங்குவேனா என்பது பற்றி மக்களிடம் தான் கேட்க வேண்டும். என்னை பற்றி விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது.
என்ன காரணம்
தேர்தல் அலுவலர் மிரட்டப்பட்டாரா என்பது பற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும். நான் அவருடன் பேசி கொண்டிருக்கும்போது அடிக்கடி வெளியில் சென்று போனில் பேசினார். யாரிடமிருந்தோ போன் வந்த பிறகு தான் எனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அறிவித்தார்.
தேர்தல் அலுவலரை மாற்றிவிட்டால் சரியாகிவிடுமா?
அலுவலரை மாற்றி விட்டால் பிரச்னை தீர்ந்துவிடுமா? நடந்த தவறை பதிவு செய்ய வேண்டும். மாற்றப்பட்டால், என்ன காரணம் எதற்காக மாற்றப்பட்டார் என்பதை தெரிவிக்க வேண்டும். சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். இதுதொடர்பாக இந்திய தேர்தல் கமிஷன், பிரதமர், ஜனாதிபதி ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்.
இவ்வாறு விஷால் கூறினார்.