ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நான் திருவாரூர்காரன் என்பதால் விவசாயத்தை கருவாக வைத்து படம் இயக்கி வருகிறேன், என்று டைரக்டர் எழில் சிலிர்ப்புடன் கூறியுள்ளார். காவிரி டெல்டா மக்களின் வாழ்வியல் கதையை தான் "மனம் கொத்திப் பறவை" என்ற பெயரில் படமாக இயக்கி வருகிறார் டைரக்டர் எழில். புதிய படம் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், படத்தின் கரு விவசாயம்தான். மக்களின் வாழ்க்கை, எப்படியெல்லாம் மாறியிருக்குன்னு எடுத்து வைக்க ஆசை. இதன் மூலம் சில பேர் யோசிக்கணும்ன்னு தோன்றியது. அதுக்குதான் இந்த ஸ்கிரிப்ட். நான் திருவாரூர்காரன் என்பதால் இதைப் படமாக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கு.
தமிழ்நாட்டு நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களில் இன்று படித்த இளைஞர்களே இல்லை. பிழைப்புத் தேடி நகர்ப்பகுதிகளுக்குச் சென்று விட்டார்கள். விவசாயம் செய்யவே ஆளே இல்லை. தஞ்சாவூரிலிருந்து நாகை போற வழியெல்லாம் பாருங்க... எத்தனை மாற்றங்கள்... காற்று, தண்ணீர், மண்ணுன்னு எல்லாத்தையும் கெடுத்தாச்சு.
விவாசயத்தின் வருங்காலத்தை நினைச்சுக்கூடப் பார்க்க முடியலை. நகரத்துல படிச்சு முடிச்சு வேலையில்லாப் பிள்ளைகள், கிராமத்துக்கு வந்து வயல், வரப்பை வாங்கி ரியல் எஸ்டேட் பண்ணுதுங்க. என்னடா இந்தக் கேள்வி சினிமாவில் இதுவரைக்கும் வரலைன்னு நினைச்சேன். அதை நானே கேட்கிறேன். கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை, அதை வைத்து நான் உணர்ந்த விஷயங்கள் உங்களிடம் வந்து சேரும் போது, அது நிச்சயம் மகத்தான விஷயமாக இருக்கும், என்று கூறியிருக்கிறார்.