துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
30 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய நான் சிவப்பு மனிதன் என்ற படத்தில் ரஜினி ஜோடியாகவும், வழக்கறிஞராகவும் நடித்திருந்தார் அம்பிகா. இப்போது எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கும் டிராபிக் ராமசாமி என்ற படத்தில் நீதிபதியாக நடிக்கிறார். டிராபிக் ராமசாமி கொண்டு வரும் பொதுநல வழக்குள் மீது தீர்ப்பளிக்கும் நீதிபதியாக நடிக்கிறார். இது குறித்து அம்பிகா கூறியிருப்பதாவது:
நான் கடந்த முப்பது ஆண்டுகளாகத் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறேன். பல்வேறுபட்ட மொழிகளில் எவ்வளவோ பாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், செண்டிமெண்டோடு கலந்த நகைச்சுவையான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமென்பது என் நீண்ட நாள் ஆசையாக, கனவாக இருந்து கொண்டிருந்தது. டிராபிக்ராமசாமி என்கிற படத்தின் மூலம் அந்தக்கனவு நிறைவேறி இருக்கிறது.
நான் சிகப்பு மனிதன் படத்தில் வக்கீல் வேடத்தில் நடித்தேன். அதை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி இருந்தார். சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு அவர் நடிக்கும் டிராபிக் ராமசாமி என்கிற படத்தில் பதவி உயர்வு பெற்று நீதிபதியாக நடிக்கிறேன். அது கதையோடு கலந்த நகைச்சுவை பாத்திரம். எனக்கு இது மிகவும் புதுமையான பாத்திரமாக மாறுபட்ட நடிப்பு அனுபவமாக இருந்தது. ஒரு வகையில் என் நீண்ட நாள் கனவு நிறைவேறிய திருப்தி வந்துள்ளது. அந்தப் பாத்திரத்தில் நான் மிகுந்த ஈடுபாட்டோடு நடித்து இருக்கிறேன் என்கிறார் அம்பிகா.