ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்நாட்டில் அரசியலில் ஒரு பக்கம் பரபரப்பு என்றால், திரையுலகத்திலும் மற்றொரு பக்கம் பரபரப்பு நிலவி வருகிறது. சென்னை, ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் விஷால் வேட்பு மனு தாக்கல் செய்த பின் நடந்த பரபரப்பும், விறுவிறுப்பும், ஒரு அரசியல் திரைப்படத்தில் கூட இடம் பெறாத மிகப் பெரும் காட்சியாக அமைந்து. அது பரபரப்பும், விறுவிறுப்பும் இன்னும் தொடரப் போகிறது.
நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணி போட்டியிடப் போகிறோம் என்று அறிவித்த நாளிலிருந்தே திரையுலகத்திற்கும் நடக்கும் அரசியல், அரசியல் நாடகம் அற்புதமாக நாளுக்கு நாள் அரங்கேறி வருகிறது. நேரடியாக விமர்சிக்க முடியாத சிலரை மறைமுகமாக விமர்சித்து அதற்கு அவர்களே தூபம் போட்டு வருகிறார்கள்.
அந்த விதத்தில் விஷாலுக்கு நேரடி எதிரியாக சித்தரிக்கப்பட்டு வரும் நடிசர் சரத்குமாரின் மனைவியான நடிகை ராதிகா சரத்குமார் நேற்று அவருடைய டுவிட்டரில் Bunch Of Jokers, அதாவது கோமாளிகளின் கூட்டம் என மட்டும் பதிவிட்டிருந்தார். யாரை அவர் அப்படி குறிப்பிடுகிறார் என்று எந்தப் பெயரையோ எந்தக் கூட்டத்தைப் பற்றியோ சொல்லாமல் விட்டது அவரையே திருப்பித் தாக்கிவிட்டது. அந்தப் பதிவிற்கு பலரும் கமெண்ட்டுகளை இட்டு, ராதிகா பக்கமே அந்த கோமாளிகளின் கூட்டம் யாரைக் குறிக்கிறது என விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
பாவம், அந்த கமெண்ட் கருத்துக்களில் தேவையே இல்லாமல் சரத்குமார் சிக்கிக் கொண்டதுதான் உச்சம். யாரை நோக்கி அம்பு எய்ய ஆசைப்படுகிறோமோ அதைச் சரியாக எய்துவிட வேண்டும். இல்லையென்றால் இப்படித்தான்... பல தேர்தல் களங்களைச் சந்தித்த ராதிகா மற்றும் சரத்குமாருக்கு இது தெரியாதா என்ன ?.