கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
தமிழ்நாட்டில் அரசியலில் ஒரு பக்கம் பரபரப்பு என்றால், திரையுலகத்திலும் மற்றொரு பக்கம் பரபரப்பு நிலவி வருகிறது. சென்னை, ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் விஷால் வேட்பு மனு தாக்கல் செய்த பின் நடந்த பரபரப்பும், விறுவிறுப்பும், ஒரு அரசியல் திரைப்படத்தில் கூட இடம் பெறாத மிகப் பெரும் காட்சியாக அமைந்து. அது பரபரப்பும், விறுவிறுப்பும் இன்னும் தொடரப் போகிறது.
நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணி போட்டியிடப் போகிறோம் என்று அறிவித்த நாளிலிருந்தே திரையுலகத்திற்கும் நடக்கும் அரசியல், அரசியல் நாடகம் அற்புதமாக நாளுக்கு நாள் அரங்கேறி வருகிறது. நேரடியாக விமர்சிக்க முடியாத சிலரை மறைமுகமாக விமர்சித்து அதற்கு அவர்களே தூபம் போட்டு வருகிறார்கள்.
அந்த விதத்தில் விஷாலுக்கு நேரடி எதிரியாக சித்தரிக்கப்பட்டு வரும் நடிசர் சரத்குமாரின் மனைவியான நடிகை ராதிகா சரத்குமார் நேற்று அவருடைய டுவிட்டரில் Bunch Of Jokers, அதாவது கோமாளிகளின் கூட்டம் என மட்டும் பதிவிட்டிருந்தார். யாரை அவர் அப்படி குறிப்பிடுகிறார் என்று எந்தப் பெயரையோ எந்தக் கூட்டத்தைப் பற்றியோ சொல்லாமல் விட்டது அவரையே திருப்பித் தாக்கிவிட்டது. அந்தப் பதிவிற்கு பலரும் கமெண்ட்டுகளை இட்டு, ராதிகா பக்கமே அந்த கோமாளிகளின் கூட்டம் யாரைக் குறிக்கிறது என விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
பாவம், அந்த கமெண்ட் கருத்துக்களில் தேவையே இல்லாமல் சரத்குமார் சிக்கிக் கொண்டதுதான் உச்சம். யாரை நோக்கி அம்பு எய்ய ஆசைப்படுகிறோமோ அதைச் சரியாக எய்துவிட வேண்டும். இல்லையென்றால் இப்படித்தான்... பல தேர்தல் களங்களைச் சந்தித்த ராதிகா மற்றும் சரத்குமாருக்கு இது தெரியாதா என்ன ?.