ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் "சொல்வதெல்லாம் உண்மை" என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இது குடும்ப பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் 1500-வது எபிசோட் படப்பிடிப்பிலிருந்து லட்சுமி ராமகிருஷ்ணன் கோபமாக வெளியேறும் வீடியோ காட்சி ஒன்று நேற்று வெளியானது.
சேனல் அதிகாரி ஒருவர் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் "உங்கள் மீது ஒரு கம்ப்ளைண்ட் வந்திருக்கு. இந்த நிகழ்ச்சியை நீங்கள் நடத்தவில்லை" என்கிறார். அதை கேட்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் மைக்கை பிடுங்கி எரிந்துவிட்டு அந்த அரங்கை விட்டு வெளியேறுகிறார்.
சொல்வதெல்லாம் நிகழ்ச்சியிலிருந்து லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியேறி விட்டதாக தகவல் பரவியது. ஆனால் இது நிகழ்ச்சியின் விளம்பரத்துக்காக சேனலே ஏற்பாடு செய்த செட்-அப் தான் என்று சேனல் தரப்பிலிருந்து சொல்கிறார்கள். இப்போதெல்லாம் ஏதாவது பரபரப்பு கிளப்பித்தான் விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டியது இருக்கிறது என்கிறார்கள் டி.வி ரசிகர்கள்.