ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தியேட்டர்களுக்கு படம் பார்க்கச் செல்கிறவர்களுக்கு பெரும் பிரச்சினையாக இருப்பது பார்க்கிங் கட்டணங்கள் தான். பெரிய மால்களில் சினிமா கட்டணத்தை விட பார்க்கிங் கட்டணம் அதிகம் கொடுக்க வேண்டியது இருந்தது. பார்க்கிங் கட்டணத்தை வரைமுறைப்படுத்த வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்தது. அதனை ஏற்று அரசு பார்க்கிங் கட்டணத்தை வரைமுறைப்படுத்தி அறிவித்துள்ளது.
அதன்படி, பெருநகரங்களில் காருக்கு 20 ரூபாயும், இரண்டு சக்கர வாகனத்துக்கு 10 ரூபாயும் வசூலிக்க வேண்டும். நகராட்சிகளில் காருக்கு 15 ரூபாயும் இரண்டு சக்கர வாகனத்துக்கு 7 ரூபாயும், பஞ்சாயத்துக்களில் காருக்கு 5 ரூபாயும், இரண்டு சக்கர வாகனத்துக்கு 3 ரூபாயும் வசூலிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து தயாரிப்பாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
திரையரங்க நுழைவு கட்டணத்தினை முறைப்படுத்தி உயர்த்தி வழங்குதல். திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணத்தை முறைப்படுத்துதல் அடங்கிய மனுவினை அரசுக்கு அளித்தோம். மனு அளித்த உடனே தமிழக அரசு திரையரங்கு நுழைவு கட்டணத்தினை முறைப்படுத்தி உயர்த்தி வழங்கியது.
தற்போது எங்களது மற்றொரு கோரிக்கையான திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டண வசதியை முறைப்படுத்தி வழங்கியுள்ளதற்கு எங்களது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும், தமிழ் திரையுலகினர் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.