பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மக்களுக்கு நல்லது செய்ய நினைத்தால் இது தான் கதியா என வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது குறித்து விஷால் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக நடிகர் விஷால் களமிறங்கினார். அப்போது பரபரப்பு ஏற்பட்டது தொடர்ந்து தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தார். நேற்று அவரது மனு பரிசீலனை செய்யப்பட்டது. விஷால் மனுவை முன்மொழிந்துள்ள வாக்காளர்களில் சுமதி, தீபன், கார்த்திக் ஆகியோர் கையெழுத்திடவில்லை. அது போலியானவை என புகார் எழ, அவரது மனு நிராகரிக்கப்பட்டதாக முதலில் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து தேர்தல் அலுவலகம் வந்த விஷால், அதிகாரிகளிடம் முறையிட்டார். தனக்கு முன்மொழியப்பட்டவர்கள் மிரட்டப்பட்டனர் என தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டார். ஆனால் தேர்தல் அதிகாரிகள் ஏற்கவில்லை. இதனால் சாலை மறியலில் ஈடுபட்டார். பின்னர் மீண்டும் அவர் அழைத்து பேசப்பட்டார். அப்போது தனது மனுவை ஏற்றதாக விஷால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆனால் அவரது மனு நிரகாரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், வேட்புமனு ஏற்கப்பட்டதாக தேர்தல் அலுவலகர் கூறிய வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. அங்கிருந்து நான் கிளம்பிய பின் மீண்டும் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் அறிவித்தது அதிர்ச்சி அளிக்கிறது. திரைப்படத்தில் வரும் காட்சிகள் போல் திருப்பங்கள் நிகழ்ந்தது. மக்களுக்கு நல்லது செய்ய வந்தால் இது தான் கதியா. என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. ஆர்.கே.நகரில் சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவளித்து அவரை வெற்றி பெற வைப்பேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.