டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சென்னை: ஆர்.கே., நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.மிரட்டல் வந்தது
தன்னை முன்மொழிந்த நபர்களுக்கு மிரட்டல் வந்துள்ளதாகவும், இது தொடர்பாக தன்னிடம் வீடியோ ஆதாரம் இருப்தாகவும், நடிகர் விஷால் திடுக் தகவலை வெளியிட்டுள்ளார். மனு தள்ளுபடி செய்யப்பட்டதும் நடிகர் விஷால் தண்டையார்பேட்டை அலுவலகம் வந்தார். மனு தள்ளுபடி தொடர்பாக காரசாரமாக தேர்தல் அதிகாரியுடன் விவாதித்தார். தொடர்ந்து அவர் தனது ஆதரவாளர்களுடன் தேர்தல் அலுவலகம் அருகே மறியல் போராட்டம் நடத்த துவங்கியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து விஷால் கைது செய்யப்பட்டார்.
மனு தள்ளுபடி ஏன் ?
வேட்புமனு தாக்கல் செய்த, நடிகர் விஷாலின் மனுவில் தொகுதியை சேர்ந்த 10 பேர் முன்மொழிய வேண்டும். இதில் முன்மொழியாத முகவரியில் தவறான 2 நபர்கள் பெயர் இடம் பெற்றுள்ளன. இது உண்மைக்கு புறம்பானது என கண்டறியப்பட்டது.
இதனையடுத்து மனு தள்ளுபடி செய்யப்படுவதாக தேர்தல் அதிகாரி வேலுச்சாமி அறிவித்தார். முன்னதாக விஷாலின் மனுவில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததாக அதிமுக, திமுக தரப்பில் தேர்தல் அதிகாரியிடம் வாதிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் முறையீடு
சாலை மறியலில் இருந்து விஷால் அப்புறப்படுத்தப்பட்ட பின்பு விஷால் மீண்டும் தேர்தல் அலுவலரிடம் முறையிட்டார். இதனையடுத்து இரவு 8.30 மணியளவில் மனு ஏற்கப்பட்டதாக செய்தியாளர்களுக்கு விஷால் பேட்டியளித்தார்.
நிராகரிப்பு
இந்நிலையில் நீண்ட ஆலோசனைக்கு பின் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் வேலுச்சாமி அதிகாரபூர்வமாக அறிவித்தார். விஷால் தந்த ஆடியோ ஆதாரத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியாது என தேர்தல் அலுவலர் விளக்கமளித்துள்ளார்.