'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சென்னை: ஆர்.கே., நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.மிரட்டல் வந்தது
தன்னை முன்மொழிந்த நபர்களுக்கு மிரட்டல் வந்துள்ளதாகவும், இது தொடர்பாக தன்னிடம் வீடியோ ஆதாரம் இருப்தாகவும், நடிகர் விஷால் திடுக் தகவலை வெளியிட்டுள்ளார். மனு தள்ளுபடி செய்யப்பட்டதும் நடிகர் விஷால் தண்டையார்பேட்டை அலுவலகம் வந்தார். மனு தள்ளுபடி தொடர்பாக காரசாரமாக தேர்தல் அதிகாரியுடன் விவாதித்தார். தொடர்ந்து அவர் தனது ஆதரவாளர்களுடன் தேர்தல் அலுவலகம் அருகே மறியல் போராட்டம் நடத்த துவங்கியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து விஷால் கைது செய்யப்பட்டார்.
மனு தள்ளுபடி ஏன் ?
வேட்புமனு தாக்கல் செய்த, நடிகர் விஷாலின் மனுவில் தொகுதியை சேர்ந்த 10 பேர் முன்மொழிய வேண்டும். இதில் முன்மொழியாத முகவரியில் தவறான 2 நபர்கள் பெயர் இடம் பெற்றுள்ளன. இது உண்மைக்கு புறம்பானது என கண்டறியப்பட்டது.
இதனையடுத்து மனு தள்ளுபடி செய்யப்படுவதாக தேர்தல் அதிகாரி வேலுச்சாமி அறிவித்தார். முன்னதாக விஷாலின் மனுவில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததாக அதிமுக, திமுக தரப்பில் தேர்தல் அதிகாரியிடம் வாதிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் முறையீடு
சாலை மறியலில் இருந்து விஷால் அப்புறப்படுத்தப்பட்ட பின்பு விஷால் மீண்டும் தேர்தல் அலுவலரிடம் முறையிட்டார். இதனையடுத்து இரவு 8.30 மணியளவில் மனு ஏற்கப்பட்டதாக செய்தியாளர்களுக்கு விஷால் பேட்டியளித்தார்.
நிராகரிப்பு
இந்நிலையில் நீண்ட ஆலோசனைக்கு பின் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் வேலுச்சாமி அதிகாரபூர்வமாக அறிவித்தார். விஷால் தந்த ஆடியோ ஆதாரத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியாது என தேர்தல் அலுவலர் விளக்கமளித்துள்ளார்.