‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
சில வருடங்களுக்கு முன் வரலாற்று பின்னணியில் 'உருமி' படத்தை இயக்கிய சந்தோஷ் சிவன், அதே காலகட்டத்தில் வாழ்ந்த கடற்படை தலைவனான குஞ்சாலி மரைக்காயர் வரலாற்றை அடுத்ததாக இயக்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்தார். மம்முட்டி கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் துவங்க உள்ளதாம்.
கடற்கொள்ளையர்கள் பற்றிய கதை என்பதால் இந்தப்படத்தின் 7௦% படப்பிடிப்பு நடுக்கடலில் தான் படமாக்கப்பட இருக்கிறதாம். படத்தில் விஎப்எக்ஸ் காட்சிகள் அதிகம் இடம்பெறுவதால் அவை உலகத்தரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக ஹாலிவுட்டில் இருந்து தொழில்நுட்ப கலைஞர்களை அழைத்துள்ளாராம் சந்தோஷ் சிவன். இந்தப்படம் சுமார் 5௦ கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருக்கிறதாம்.