தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் ஜெயம் ரவியின் அண்ணன் ஜெயம் ராஜா என்ற மோகன் ராஜா. தனி ஒருவன் படத்திற்கு பிறகு, தற்போது சிவகார்த்திகேயனை வைத்து வேலைக்காரன் என்ற படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் மோகன் ராஜா பேசியதாவது...
உழைப்பை நம்பி வாழும் வேலைக்காரர்களுக்கு இந்த படம் சமர்ப்பணம். எங்கள் மொத்த குழுவின் உழைப்புக்கு மரியாதை கொடுத்தது அனிருத்தின் இசை. அவரின் இசை தான் ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வரும் ஆயுதம். எங்கு போனாலும் தனி ஒருவன் மாதிரி படம் பண்ணுங்க என்று பலரும் சொல்கிறார்கள்.
அப்படி தயாரிப்பாளர் ராஜா கொடுத்த தைரியம் தான் இந்த வேலைக்காரன். சிவகார்த்திகேயனுடன் வேலை செய்வது மிகவும் சவுகரியம். மீண்டும் நாங்கள் இணைவோம்.
சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்கிறார்கள். அரசியலுக்கு வர சினிமாகாரனுக்கு தான் எல்லா தகுதியும் உண்டு. மக்கள் உணர்வுகளை அதிகம் புரிந்தவர்கள் கலைஞர்கள் தான்.
இவ்வாறு மோகன் ராஜா கூறினார்.