ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தயாரிப்பாளர் சங்க விதிகளுக்கு எதிராக நான் செயல்படவில்லை என இயக்குநர் சேரனுக்கு, விஷால் பதிலடி கொடுத்துள்ளார். நடிகர் விஷால், ஆர்.கே.நகரில் தேர்தலில் களமிறங்கி, வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு சேரன் உள்ளிட்ட சில குறிப்பிட்ட தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை, அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆர்.கே.நகரில் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால்...
மக்களின் பிரச்னைகளை முன்னிறுத்தி, அடிப்படை பிரச்னைகளை கையிலெடுத்து ஆர்கே.நகரில் ஓட்டு சேகரிக்க உள்ளேன். அந்த தொகுதி மக்கள், அடிப்படை வசதிகளை தான் எதிர்பார்க்கின்றனர். அவர்களின் பிரதிநிதியாக இருக்கவே நான் விரும்புகிறேன். நடிகர் என்பதால் தேர்தலில் நிற்க கூடாது என்கிறார்கள். நடிகர் சங்க தேர்தலில் நின்றபோதும், தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் நின்றபோதும் இதே மாதிரி பிரச்னை செய்தார்கள். அதையெல்லாம் மீறி நாங்கள் ஜெயித்தோம்.
இது ஜனநாயக நாடு, சட்டத்தை மீறி நான் எதுவும் செய்யவில்லை. தயாரிப்பாளர்கள் சங்க விதிகளையும் நான் மீறவில்லை. நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தின் பிரச்னைகளை தீர்த்து வருகிறோம்.
இவ்வாறு விஷால் கூறினார்.