டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகர் விஷால், ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேரன் தலைமையிலான தயாரிப்பாளர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
நடிகர் சங்கம் செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் பொறுப்பிலிருக்கும் நடிகர் விஷால், இப்போது ஆர்.கே.நகர் தேர்தலில் களம் இறங்கி இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அரசியல் அமைப்புகளில் உள்ளோர், நடிகர் சங்கத்தின் வளர்ச்சி பணிகள் மீது அக்கறை காட்ட முடியாது என்ற கருத்தை முன்வைத்தவர் விஷால். இப்போது அவரே தேர்தலில் போட்டியிடுவதால் அவருக்கு எதிராக தயாரிப்பாளர்கள் திரும்பி உள்ளனர்.
சேரன் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சிலர், சென்னை தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கி உள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சேரன்...
சினிமா என்பது ரூ.1000 கோடி முதலீட்டில் நடக்கும் தொழில். ஆர்கே நகர் தேர்தலில் விஷால் போட்டியிடுவது தயாரிப்பாளர்களாகிய எங்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. சிறுபிள்ளை தனமாக தேர்தலில் களம் காண்கிறார். விஷால், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொறுப்பிற்கு வந்து 8 மாதம் ஆகிவிட்டது. ஆனால் அவர் சொன்ன ஒரு வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை.
தயாரிப்பாளர்கள் பற்றி அவருக்கு எந்த கவலையும் இல்லை. தயாரிப்பாளர் சங்கம் முடங்கினால், திரையுலகம் முடங்கும். தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை விஷால் ராஜினாமா செய்யும் வரை உள்ளிருப்பு போராட்டம் நடக்கும். அவர் ராஜினமா செய்யாவிட்டால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு சேரன் கூறினார்.