ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி-அக்சய்குமார் இணைந்து நடித்துள்ள படம் 2.ஓ. ரூ. 400 கோடி பட்ஜெட்டில் தயாராகியிருப்பதாக கூறப்படும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகியிருக்கிறது. படப்பிடிப்பு எப்போதோ முடிந்து விட்டபோதும் இறுதிகட்ட பணிகள் நீண்டகாலமாக நடந்து கொண்டிருக்கிறது. மேலும், 2.ஓ படத்தை அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியிடயிருப்பதாக அறிவித்திருந்தனர்.
ஆனால், தற்போது அப்படத்தின் ரிலீஸ் தேதியை ஏப்ரல் 27-ந்தேதிக்கு மாற்றி வைத்திருப்பதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக, தெலுங்கில் ஏப்ரல் 27ந்தேதி அன்று வெளியாகயிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த மகேஷ்பாபுவின் பாரத் அனே நேனு, அல்லு அர்ஜூனின் நா பேரு சூர்யா ஆகிய இரண்டு படங்களில் ரிலீஸ் தேதியையும் மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது. ரஜினியின் 2.ஓ படத்தினால் தங்கள் படங்களின் வசூல் பாதிக்கும் என்பதினால் இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.