இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நான் அரசியல்வாதி அல்ல; மக்கள் பிரதிநிதியாகவே ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுகிறேன், 100 சதவீதம் வெற்றி வாய்ப்புள்ளது என, நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷாலும் களம் காண்கிறார். இன்று (டிசம்பர் 4) அவர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். முன்னதாக தி.நகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்திற்கு சென்ற விஷால், அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், நான் அரசியல்வாதி அல்ல. மக்கள் பிரதிநிதியாகவே இந்த தேர்தலில் மனு தாக்கல் செய்ய உள்ளேன். எனக்கு பின்னால் யாரும் கிடையாது. மக்களின் தைரியம் தான் எனக்கு ஆதரவு. அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என ஆர்.கே.நகர் மக்கள் விரும்புகின்றனர். யாருடைய வாக்கு வங்கியையும் பிரிப்பதற்காக நான் தேர்தலில் போட்டியிடவில்லை. 100 சதவீதம் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. ரஜினி, கமல் என யாரிடமும் ஆதரவு கேட்க மாட்டேன் என்றார்.
தொடர்ந்து நடிகர் சிவாஜியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.