ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன். ஆறுமுக குமார் எழுதி, இயக்கியுள்ள இப்படத்தின், டீசர் சமீபத்தில் வெளியானது. அதில், சீதையை கடத்திய ராவணன், அவரை உயிரோடு வைத்தான். ஆனால், அவனை கெட்டவன்
என்கின்றனர். அதே சீதையை மீட்டுச் சென்று, சந்தேகத் தீயில் போட்ட ராமனை, நல்லவன் என்கின்றனர் என, விஜய் சேதுபதி பேசும் வசனம் இடம் பெற்றுள்ளது. இந்த வசனம், தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மெர்சல் படத்தை தொடர்ந்து, பா.ஜ.,வினர் பார்வை, விஜய் சேதுபதி பக்கம் திரும்பி உள்ளது. இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்காத விஜய் சேதுபதிக்கு, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம், புதிய அனுபவத்தை கொடுக்கும் என, ரசிகர்கள் கூறுகின்றனர்.