ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜெயம்ரவி நடித்து வரும் படம் டிக் டிக் டிக், நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் படங்களை இயக்கிய ஷக்தி சவுந்தர்ராஜன் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். ஹாலிவுட் படங்களை தமிழ்நாட்டுக்கு ஏற்ப மாற்றி இயக்கி வரும் ஷக்தி சரவணன், ஹாலிவுட்டில் வெளிவந்த கிராவிட்டி பட பாணியில் உருவாக்கி இருக்கும் வின்வெளி பயணக்கதை. இந்தியாவில் தயாராகும் முதல் வின்வெளி கதைப் படம் என்றும் இதனை குறிப்பிடலாம்.
இதில் ஜெயம்ரவியுடன் நிதேவதா பெத்துராஜ், ஜெயபிரகாஷ், ரமேஷ்திலக், வின்சென்ட் அசோகன் ஆகியோரும் நடித்துள்ளார்கள். பிரபல சிங்கப்பூர் நடிகர் ஆரோன் அசிஸ் வில்லனாக நடிக்கிறார். எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இமான் இசை அமைத்துள்ளார்.
இதன் படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது. அதிகமாக புளூமெட்டில் படமாக்கப்பட்ட இந்தப் படத்தின் வின்வெளி காட்சிகளை கிராபிக்ஸ் நிபுணர்கள் உருவாக்கி வந்தார்கள். தற்போது அந்த பணிகள் முடிந்திருக்கிறது. இதனால் படத்தை இந்திய குடியரசு தினமாக ஜனவரி 26ந் தேதி வெளியிட தயாரிப்பாளர் ஹித்தேஷ் ஜெபக் முடிவு செய்து அறிவித்துள்ளார்.