'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வி.கிரியேஷன் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் படம் துப்பாக்கி முனை. நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல படத்தை இயக்கியவர் தினேஷ் செல்வராஜ். தற்போது விக்ரம் பிரபுவை இந்தப் படத்தை இயக்கி வருகிறார். ராசாமதி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு எல்.வி.முத்துகணேஷ் இசையமைக்கிறார்.
இதில் துப்பாக்கி முனையில் கைதிகளைக் குறி வைத்து என்கவுன்ட்டர் செய்யும் போலீஸ் அதிகாரியாக விக்ரம் பிரபு நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை உறுதி செய்யும் விதமாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் 33 பேரை கொலை செய்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
போலீஸ் தொடர்புடைய படம் என்பதால் பல தலைப்புகள் யோசிக்கப்பட்டு இறுதியில் துப்பாக்கி முனை என்று பெயர் தேர்வானது. ரஜினிக்கு மூன்று முகம், சூர்யாவுக்கு காக்க காக்க, கமலுக்கு காக்கிச் சட்டை, விஜயகாந்துக்கு கேப்டன் பிரபாகரன், விக்ரமிற்கு சாமி மாதிரி இந்தப் படம் விக்ரம் பிரபுக்கு அமையும் என்கிறார்கள். படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது. படத்தின் நாயகி யார்? மற்ற கலைஞர்கள் யார் என்பதை பற்றி விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.