மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? |
பாகுபலி-2 படத்திற்கு பிறகு மூன்று மொழிகளில் தயாராகும் இன்னொரு மெகா சரித்திர படம் சைரா நரசிம்ம ரெட்டி. சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் இந்த படத்தில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் 200-க்கும் மேற்பட்ட பிரிட்டீஷ் நடிகர்கள் நடிக்கிறார்கள். சிரஞ்சீவியின் மகனான நடிகர் ராம்சரண் இந்த படத்தை தயாரிக்கிறார்.
மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 6-ந்தேதி முதல் ஐதராபாத்தில் போடப்பட்டுள்ள செட்டில் தொடங்குகிறது. ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். ஒரு வாரம் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்த பிறகு, படமாக்கிய காட்சிகளை எடிட் செய்து பார்வையிடுகிறார் சிரஞ்சீவி. அதையடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பு நடக்க உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புக்காக, தான் நடித்து வரும் ரங்கஸ்தலம் படத்திற்கு 10 நாட்கள் பிரேக் கொடுத்துள்ளார் ராம் சரண்.