‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
பிரேமம் சாய்பல்லவி, சேகர் கம்முலா இயக்கிய பிடா படத்தில் தெலுங்கில் அறிமுகமானார். அந்த படம் ஹிட்டடித்ததை அடுத்து தற்போது நானிக்கு ஜோடியாக எம்சிஏ படத்தில் நடித்துள்ளார். இதை யடுத்து தமிழ், தெலுங்கில் தயாராகும் கரு மற்றும் தனுஷின் மாரி-2 படத்திலும் நாயகியாக நடிக்கிறார் சாய்பல்லவி.
மேலும், நானியுடன் எம்சிஏ படத்தில் நடிக்க சாய்பல்லவியை ஒப்பந்தம் செய்தபிறகு அந்த படத்தின் தயாரிப்பாளரான தில்ராஜூ, நிதின் நடிப்பில் தான் அடுத்தபடியாக தயாரிக்கும் புதிய தெலுங்கு படத்தில் நடிக்கவும் சாய்பல்லவியை அழைத்திருக்கிறார்.
ஆனால் அந்த படத்தின் கதையை கேட்ட சாய்பல்லவி, அந்த கதை தனக்கு பிடிக்காததை அடுத்து அந்த படத்தில் நடிக்க முடியாது என்று நேரடியாகவே சொல்லிவிட்டாராம். அதனால் இப்போது சாய் பல்லவி நடிக்க மறுத்த அந்த வேடத்தில் நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.