ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாள திரையுலகில் பாடகர், சின்னத்திரை நடிகர், காமெடி நடிகர் என பல அடையாளங்களுடன் வலம் வருபவர் இயக்குனர் நாதிர்ஷா. நடிகர் திலீப்பின் நண்பரான இவர், சமீபத்திய நடிகை கடத்தல் வழக்கு பிரச்சனையிலும் சிக்கியவர்.
கடந்த 2015ல் வெளியான 'அமர் அக்பர் ஆண்டனி' படம் மூலம் இயக்குனராக உருவெடுத்த இவர், தனது முதல் படத்தில் தனது நீண்டநாள் நண்பரான திலீப்பை விட்டுவிட்டு, பிருத்விராஜையும், ஜெயசூர்யாவையும் ஹீரோவாக்கினார். படமும் ஹிட்டானது.
இரண்டாவது படத்திலோ கதாசிரியாக தன்னுடன் இணைந்து பணியாற்றிய விஷ்ணு உன்னிகிருஷ்ணனை ஹீரோவாக அறிமுகப்படுத்தி கட்டப்பனயிலே ரித்விக்ரோஷன் என்கிற படத்தை சின்ன பட்ஜெட்டில் எடுத்து அதையும் ஹிட்டாக்கினார் நாதிர்ஷா.
தற்போது அவரது மூன்றாவது படத்தை திலீப்பை வைத்து இயக்குவதை உறுதிப்படுத்தியுள்ள நாதிர்ஷாவும் திலீப்பும், 'கேசு ஈ வீட்டிண்டே நாதன்' என படத்திற்கு டைட்டில் வைத்து அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் உள்ளார்கள்.