வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இயக்குனர் ஜீத்துவின் லைப் ஆப் ஜோஸுட்டி படத்தில் திலீப்புக்கு ஜோடியாகவும், ஞான் படத்தில் துல்கருக்கு ஜோடியாகவும் நடித்தவர் மலையாள நடிகை ஜோதிகிருஷ்ணா.
சமீபத்தில் தான் இவரது திருமணம் முடிந்துள்ள நிலையில் ஸ்ரீபத்ரா என்கிற போலியான பேஸ்புக் ஐடியில் இருந்து, ஜோதிகிருஷ்ணாவின் கணவர் உள்ளிட்ட புகுந்த வீட்டு நபர்களுக்கு, “இந்தப் பெண்ணை போய் திருமணம் செய்ய எப்படி முடிவெடுத்தீர்கள்” என்பது போன்ற சில அருவருப்பான மெசேஜ்கள் அனுப்பப்பட்டன.
இதைக்கண்டு ஜோதி கிருஷ்ணா அதிர்ச்சி அடைந்தாலும், தனது கணவர் உள்ளிட்ட புகுந்த வீட்டினர் தன் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும், தனது திருமணத்திற்கு பின்னும் கூட இப்படி அவதூறு பரப்பும் அந்த ஆண்/பெண் தனது வேலையை இத்துடன் நிறுத்திக்கொள்ளட்டும் என்றும் கண்டித்துள்ளார்.
கடந்த வருடம் கூட இவர் ஆபாசமாக காட்சியளிப்பது போன்ற புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் பரவியதும் ஆனால் அப்போதும், இப்போதும் இதுகுறித்து அவர் போலீசில் ஏதும் புகார் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.