சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
தமிழ்த் திரையுலகத்தில் தற்போது இளம் வில்லன்களுக்கான பஞ்சம் அதிகமாகிவிட்டது. எல்லாருக்குமே நாயகனாக மட்டுமே நடிக்க ஆசை. ஒரு முறை வில்லனாக நடித்துவிட்டால் தொடர்ந்து வில்லனாக மட்டுமே நடிக்க அழைப்பார்களோ என்று தயக்கம். இருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே அதையெல்லாம் பார்க்காமல் கிடைக்கும் நல்ல வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
அந்த விதத்தில் பிரசன்னா தற்போது தொடர்ந்து வில்லனாக நடிக்க முடிவெடுத்துவிட்டார் போலிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பே மிஷ்கின் இயக்கிய 'அஞ்சாதே' படத்தில் நரேனுக்கு எதிராக வில்லனாக நடித்தவர் இப்போதும் நடிக்க மாட்டாரா என்ன?.
'திருட்டுப் பயலே 2' படத்தில் வில்லனாக நடித்த பிரசன்னா, திரையில் அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை அப்படியே வெளிப்படுத்திவிட்டார் என பலரும் பாராட்டி வருகிறார்கள். தமிழில் 'திருட்டுப் பயலே' என்றால் அதே தினத்தில் தெலுங்கிலும் வில்லனாக நடித்த 'ஜவான்' படமும் வெளியானது. ஒரே நாளில் இரண்டு மொழிகளில் வில்லனாக நடித்த படங்கள் அவரை ரசிகர்களிடம் சரியாகக் கொண்டு போய் சேர்த்துள்ளன. தொடர்ந்து வில்லனாக நடித்தால் பிரகாஷ்ராஜ் போல பல ஆண்டுகள் நிலைத்து நிற்கலாம். ஆனாலும், பிரசன்னா அப்படித் தொடர்வாரா என்பது சந்தேகம்தான்.