அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
கலர்ஸ் என்ற குறும்படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் எஸ்.பி.மோகன். இப்போது அந்த குறும்படத்தையே பஞ்சு மிட்டாய் என்ற பெயரில் திரைப்படமாக இயக்கி வருகிறார். இதனை எஸ்.கணேஷ் தயாரிக்கிறார். மா.கா.பா.ஆனந்த், நிகிலா விமல், செண்ட்ராயன், பாண்டியராஜன், தவசி உள்பட பலர் நடிக்கிறார்கள். இமான் இசை அமைக்கிறார். மாதேஷ் கே.தேவ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை பாகுபலிக்கு கிராபிக்ஸ் பணிகளை செய்த வி.ஸ்ரீனிவாஸ் மோகன் தலைமையிலான டீம் உருவாக்கி வருகிறார்கள். இதுகுறித்து படத்தின் இயக்குனர் எஸ்.பி.மோகன் கூறியதாவது:
இது பேண்டசி கலந்த யதார்த்த படம். புரோட்டா மாஸ்டர் மா.கா.பா ஆனந்த், அவரது மனைவி நிகிலா விமல், அவரது நண்பர் செண்ட்ராயன் ஆகியோருக்கு இடையிலான கதை. அவர்கள் நிஜவாழ்க்கையில் எளிமையானவர்கள். ஆனால் அவர்களின் கனவுலக வாழ்க்கை சுவாரஸ்யமானது. அந்த கனவுலக வாழ்க்கையை கிராபிக்ஸ் உதவி கொண்டு வடிவமைத்து வருகிறோம். பாகுபலி கிராபிக்ஸ் டிசைனர் ஸ்ரீனிவாஸ் மோகன் தலைமையிலான டீம் கடந்த ஒரு வருடமாக இதனை உருவாக்கி வருகிறார்கள். படத்தின் பட்ஜெட்டில் பாதி கிராபிக்ஸ் பணிகளுக்குத்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு நிச்சயம் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும். என்றார் மோகன்.