‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
அறிமுக இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா, ஹன்சிகா மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் 'குலேபகாவலி' படம் பொங்கலுக்கு வெளியாகும் என அப்படத்தைத் தயாரித்துள்ள கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
நயன்தாரா நடிக்க சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற 'அறம்' படத்திற்குப் பிறகு இந்நிறுவனத்தின் இரண்டாவது படம் இது. நயன்தாராவின் மேலாளர் என்று சொல்லப்படும் கோட்டபாடி ஜே. ராஜேஷ் தான் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
'குலேபகாலி' படத்தின் முதல் பார்வை போஸ்டர்களில் அந்தக் கம்பெனியின் பெயர் இருக்கிறது. அப்போது அது பற்றி பலருக்கும் தெரியவில்லை. ஆனால், 'அறம்' படத்திற்குப் பிறகு அந்த நிறுவனம் பிரபலம் ஆகியுள்ளது. அந்த நிறுவனத்தின் தயாரிப்பில் பிரபுதேவா எப்படி நடித்துள்ளார் என்பதுதான் இன்றைய ஆச்சரியம்.
நயன்தாராவும், பிரபுதேவாவும் ஒரு காலத்தில் காதலர்களாக இருந்தார்கள். பிரபுதேவாவுக்காக நயன்தாரா இந்து மதத்திற்கும் மாறினார். அதன் பின் அந்த காதல் விவகாரம் அப்படியே அமுங்கிப் போனது.