ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் ஆண்டனி நடித்துள்ள அண்ணாதுரை படம் நேற்று திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தில் அவர் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். ஸ்ரீனிவாஸ் இயக்கியுள்ள இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில நடைபெற்றது. அப்போது விஜய் ஆண்டனி பேசுகையில்,
பொதுவாக படங்கள் என்றாலே ஒரு நல்லவனுக்கும், கெட்டவனுக்குமிடையே நடக்கும் கதையில் இருக்கும். ஆனால் இந்த அண்ணாதுரை படம் இரண்டு நல்லவர்களுக்கிடையே நடக்கும் கதையில் உருவாகியிருக்கிறது. எனது எல்லா படங்களிலும் இருப்பது போலவே இந்த படத்திலும் செண்டிமென்ட் உள்ளது. காரணம், செண்டிமென்ட் எப்போதுமே ஜெயிக்கும்.
கதைகளுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்கும் நான், அந்த கதைக்கு நான் செட்டாக வேண்டும் என்று நினைக்கிறேன். காரணம், எனக்கு நடிக்க தெரியாது. டைரக்டர் சொல்வதை அப்படியே செய்வேன். இதுவரை அப்படித்தான் செய்து கொண்டிருக்கிறேன். இனிமேல் அப்படித்தான் செய்வேன். மைக்கேல் மதன காமராசன் படத்தில் கமல் சார் மூன்று வேடங்களில் சிறப்பாக நடித்திருப்பார். அதைப்பார்த்தால் மலைப்பாக உள்ளது. அப்படியெல்லாம் என்னால் நடிக்கவே முடியாது.
அதோடு, நயன்தாரா, திரிஷா போன்ற முன்னணி நடிகைகளுடன் நடிக்க வேண்டியதானே என்று என்னிடம் கேட்கிறார்கள். என்னைப்பொறுத்தவரை வித்தியாசமான கதை என்பதில் மட்டும்தான் கவனம் செலுத்துவேன். ஹீரோயின் விசயத்தில் கவனம் செலுத்துவதில்லை. என்னைக்கேட்டால், என்னுடன் நடிக்கும் டயானா சாம்பிகா போன்றோர்கள் தான் எனக்கு நயன்தாரா, திரிஷா.
நான் எனது சொந்த ஊரான திருநெல்வேலியில் படித்தபோது இசைப்பயிற்சி எடுக்காமலேயே மேடையேறி பாடினேன். அதன்பிறகு சென்னை வந்து மியூசிக் படிக்க சென்றபோது அவர்கள் ரொம்ப மெதுவாக சொல்லிக் கொடுத்தனர். ஆனால் என் வேகத்துக்கு அது செட்டாகவில்லை. அதனால் இசையை படிக்காமலேயே இசையமைக்கத் தொடங்கினேன்.
அதேமாதிரி தான் நடிப்பதிலும் நான் பயிற்சி எடுக்கவில்லை. எனக்கு என்ன தோன்றுகிறதோ அதைத்தான் செய்கிறேன். பயிற்சி என்பது அவசியம் தான் என்றாலும், பயிற்சி எடுக்காமலேயே முயற்சி இருந்தாலும் ஜெயிக்க முடியும் என்பதற்கு நான் ஒரு உதாரணம் என்கிறார் விஜய் ஆண்டனி.